ஓம்சக்தி சேகர் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி
அன்பிற்கினிய புதுவை மக்களுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
புதிய ஆண்டான இது, மக்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் விதைக்கும் இனிய தொடக்கமாக அமையட்டும். நாம் அனைவரும் ஒருமித்த மனதுடன் செயல்பட்டு, எதிர்கொள்ளும் தடைகளை தகர்த்து, புதிய சாதனைகளை உருவாக்கி, வளமிக்க புதுச்சேரியை கட்டியெழுப்ப உறுதியெடுப்போம்.
இந்த தமிழ்ப் புத்தாண்டு, புதுவை மக்களுக்கு தொடர்ந்த வளர்ச்சி, குறையாத மகிழ்ச்சி, முழுமையான நலம் மற்றும் நாளும் மலரும் முன்னேற்றத்தை அளிக்கும் சிறப்பான ஆண்டாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
மீண்டும் ஒருமுறை, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான நெல்லிதோப்பு தொகுதி மக்களுக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.