திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 108 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் முருகேசன் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்திராகாந்தியின் உருவ படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து அக்கட்சியினர் வாழ்த்துக்கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இதில் வட்டார தலைவர்கள் சிவ சண்முகம், கே.கே.பி,செல்வம், சத்தியசீலன், ராதாகிருஷ்ணன், தமிழரசன், தினேஷ் பாபு, குழந்தை, டைலர் பாலன், ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு தலைவர் நஜீம் அப்துல்லா, வீரபாண்டியன், பாண்டி முருகன், கணபதி, ஆரோக்கியம், வக்கீல் கலைராஜ், வக்கீல் ஜான் போஸ்கோ, பெரியசாமி, குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
மணப்பாறையில் இந்திராகாந்தி பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்