பேப்பர் செய்தி
அறந்தாங்கி நவம்பர் 8
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புதிய பேருந்து நிலைய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாரச்சந்தை வியாபாரிகள் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்
அறந்தாங்கியில் இயங்கி வரும் வார சந்தையின் ஒரு பகுதியில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைவது குறித்த அரசாணையை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்
சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு கொன்ட அறந்தாங்கி வாரச்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று சந்தை நடைபெறும்
சந்தை நடைபெறும் தினத்தில் அறந்தாங்கி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல வியாபாரிகள் இச்சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர்
தற்போது அரசு வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் ஒரு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாரச்சந்தை வியாபாரிகள் இன்று அறந்தாங்கியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருந்தனர்..
இந்நிலையில் இப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால்..
போராட்டத்தில் ஈடுபட இருந்த வாரச்சந்தை வியாபாரிகள் சந்தை பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று அறந்தாங்கி அம்மா உணவகம் முன்பு புதிய பேருந்து நிலையம் வார சந்தைக்குள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
அறந்தாங்கி பழனிவேல்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!