புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாநிலத் தலைவர் திரு. வி.பி. ராமலிங்கம் அவர்கள் தலைமையில், பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் 12 ஆண்டு சாதனைகளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று” என்ற திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்காக அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துமாறு மாநிலத் தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் திரு. ஏம்பலம் செல்வம், நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் திரு. அசோக் பாபு, திருமதி ஜெயலட்சுமி, திரு. புகழேந்தி, திரு. செந்தாமரைக்கண்ணன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு. மோகன்குமார், திரு. லட்சுமிநாராயணன், மாநில துணைத் தலைவர்கள், திரு. ஜெயக்குமார், திரு. தமிழ்மாறன், மாவட்டத் தலைவர்கள் திரு. உலகநாதன், திரு. கிருஷ்ணராஜ், திருமதி அனிதா, திரு. சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சேலத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் – வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சி.