சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்கள், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம்,உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் 05.05.2026 முதல் தினசரி ஆஜராகி கையொப்பமிட்டு வந்தனர். இந்நிலையில், 25.05.2026_ந் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு செல்லும் போது உளுந்தூர்பேட்டை-சேலம் ரவுண்டாணா அருகே மர்ம கும்பல் வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தனிப்படையினரின் விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கி, அடைக்கலம் கொடுத்து உதவிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், இரண்டு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றபட்டுள்ளன.
இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை தொடரும்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.