கோவை -ஜூன்:02
இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கோவை சவுரிபாளையம் சாலையில் அமைந்துள்ள 1688 என்கொண்ட டாஸ்மார் மதுக்கடை நீண்ட காலமாக இயங்கி வருகிறது. விதிகளுக்கு புறம்பாகவும் மக்கள் குடியிருப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் உள்ள மது கடைகள் அகற்றப்படும் என்ற தமிழக முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பை தொடர்ந்து இக்கடை உடனடியாக மூடப்படும் என அப்பகுதி பெண்கள்,பள்ளி குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் எதிர்பார்ப்பாக காத்திருந்தனர்.
ஆனால் இன்றுவரை இந்த கடை மூடப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆகவே இந்த மதுக்கடையை அகற்றி இடமாற்றம் செய்து தர வேண்டும் என்று சவுரிபாளையம் பொதுமக்கள் மற்றும் எங்கள் அமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று மனு அளித்தனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.