வந்தவாசி, நவ 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.நம்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. எஸ்எம்சி தலைவர் தமிழ்ச் செல்வி, கல்வியாளர் பொன்.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் துர்காதேவி வரவேற்றார். மேலும் பள்ளி செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் இயங்காத நிலையில் உள்ள மின்சாதன பொருட்களான தொலைக்காட்சி, லேப்டாப் உள்ளிட்டவைகளை தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் உதவி ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!