June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செய்தித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.ராஜ்மோகன் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பத்திரிகையாளர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்பட்டு, பத்திரிகையாளர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்.

பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றுதல், பத்திரிகையாளர் நலவாரியத்தை சீரமைத்தல், அரசின் அனைத்து நலத்திட்டங்களும் அனைத்து தரப்பு பத்திரிகையாளர்களும் பயன்பெறும் வகையில் அமைந்திடவும், பத்திரிகைத் துறையில் தற்போது நிலவும் ஏகபோக (Monopoly) முறையை ஒழித்து சிறிய பெரிய என்ற பேதமின்றி அச்சு ஊடகம், காட்சி ஊடகம், பருவ இதழ்கள், மாவட்டம் – தாலுக்கா நிருபர்கள் என அனைவருக்கும் சமமான அங்கீகாரம் மற்றும் உரிமைகள் வழங்குதல் உள்ளிட்ட பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை தங்களது புதிய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தங்களது பணிக்காலம் பத்திரிகையாளர்களின் நலனுக்கான
பொற்காலமாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பணி சிறக்க வாழ்த்தும்..
S.சரவணன்
தலைவர்
9840035480

You may have missed

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜூன்-07:உலக சுற்றுச்சூழல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் மக்கள் ஜனாதிபதி APJ அப்துல் கலாமின் வல்லரசு இந்தியா இயக்கம் மற்றும் APJ அப்துல் கலாம் IAS அகாடமி சார்பில் செஞ்சி கோட்டை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு வருவாய் ஆய்வாளரும், சமூக சேவகருமான கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அருள்தாஸ், புகழரசன், தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் ஹரிவாசன் மற்றும் செஞ்சி APJ அப்துல் கலாம் IAS அகாடமியின் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.