கோவிலில் சீட்டு போடும் பணிக்காக வேலை வாங்கி தருவதாக கூறி. 425000 மோசடி செய்த அறங்காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வடமதுரை மே14 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல் திருச்சி சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சிம்ம சொற்பனமாக அமைந்திருக்கும் வண்டி கருப்பண்ண சாமி கோவிலில் சீட்டு போடும் வேலை வாங்கி தருவதாக கூறி அறங்காவலர் ரங்கநாதன் என்பவர் அய்யலூர் மணியக்காரன்பட்டி பகுதியைச் சேர்ந்த உஷாராணி என்ற பெண்ணிடம் ரூபாய் 4,25,000 பணம் வாங்கிக் கொண்டு இன்றும் நாளையும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக கோவில் அருகே நின்று அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோஷங்களில் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் அடிப்படையில் போலீசார் கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட அறங்காவலர் வசம் வட்டிக்காசு போல் உங்களுக்கு வாங்கி கொடுத்து சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர் அறங்காவலர் இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா அல்லது இவர் மட்டுமே ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தி உங்களுக்கு வரவேண்டிய தொகையை பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக கூறி புகார் அளித்தும் வடமதுரை போலீசார் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!