June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போதிய பராமரிப்பு இன்றி இருக்கும் வந்தவாசி புதிய பேருந்து நிலையம்..!

வந்தவாசி, மே 14:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் பராமரிப்பு இன்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கட்டிடங்கள் பராமரிப்பு இன்றி மேற்புற பகுதியில் அரசமர கன்றுகள் வளர்ந்து கட்டித்தை சேதமடையும் சூழலில் உள்ளது. மேலும் ஆங்காங்கே குப்பைகளும், துர்நாற்றம் வீசும் சூழலும் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அருகே நூலகம் இருப்பதால் அங்கும் சிரமம் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.