April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேவனூரில் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் வாக்கு சேகரிப்பு .செஞ்சி, ஏப் 6

மேல்மலையனூர் ஒன்றியம் தேவனூரில் பாமக வேட்பாளர் கணேஷ்குமார், வாக்காளர்களிடையே வாக்குகளை சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின்
செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை காலை மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் தேவனூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருநாகேஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்தார் மேல்மலையனூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பாலகிருஷ்ணன், சிறப்பு பூஜை ஏற்பாடு செய்திருந்தார்

பின்னர் தேவனூர் கிராமத்தில் பொதுமக்கள் இடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பின்னர் கிராமத்தில் உள்ள மக்களிடம் வீதி வீதியாக சென்று தனது வாக்கு சேகரிப்பை தொடங்கினார் அதைத்தொடர்ந்து ஒன்றியத்தில் உள்ள சமத்தகுப்பம்,சித்தேரி, கெங்கபுரம், சிறுதலைப்பூண்டி, வளத்தி, கன்னலம், உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண் தத்தன், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வி.ஆர். பிரித்விராஜ், தகவல் தொழில் நுட்ப அணி சுகன்ராஜ்,தேவனூர் மணி, சித்தேரி ராஜேந்திரன்,பாமக நிர்வாகிகள் அன்பழகன், அருண்மொழிதேவன், ஜெயகுமார், ஜே.பி. முருகன், ஒன்றிய செயலாளர்கள் சேட்டு,நீலகண்டன், சந்திரசேகர், கண்ணன், பாஜக நிர்வாகி துரைராஜ்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp