April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தி.மு.கவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மேற்கு மாவட்ட செயலாளரும் , அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரமான வ. வினோத் கண்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.திமுக தலைமைப் பொறுப்புகள் மற்றும் முக்கிய பதவிகள் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது.இது மற்ற திறமையான தொண்டர்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் குற்றம் சாட்டுகள் எழுகின்றனர்.சட்டம் ஒழுங்கு மற்றும் ‘அராஜகம்’தி.மு.க ஆட்சியில் இருக்கும்போது நில அபகரிப்புப் புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் தலையீடு உள்ளூர் மட்டத்தில் அதிகமாக இருக்கும் என்பது நீண்டகால விமர்சனமாகவே உள்ளது. ‘கட்டப் பஞ்சாயத்து’ போன்ற கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சம் ஒரு தரப்பு மக்களிடையே நிலவுகிறது.ஊழல் புகார்கள்கடந்த காலங்களில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கு போன்ற பெரிய அளவிலான ஊழல் புகார்கள் அக்கட்சியின் மீது சுமத்தப்பட்டன. தற்போதைய ஆட்சிக் காலத்திலும் அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை விசாரணைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம், நீட் தேர்வு ரத்து போன்றவை) முழுமையாக நிறைவேற்றவில்லை இதனால் அதிருப்தியில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே உள்ளது.விலைவாசி உயர்வு மற்றும் கட்டண உயர்வுமின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் ஆவின் பால் விலை உயர்வு போன்றவை நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பாதிப்பதாக உள்ளது . இது இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியாகப் பார்க்கப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்காமல் திமுக துரோகம் செய்தது. வன்னியர்களை பெரும்பான்மையாக வாக்காளர்களாக கொண்டுள்ள அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வன்னியர்களுக்கு சீட்டு வழங்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. எனவே வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு முன் நின்று போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp