புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மக்களாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கவும் தற்போதைய மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை நாம் கட்டமைத்து வருகிறோம்.
அந்த வகையில், மதச்சார்பற்ற கொள்கைகளில் உடன்பாடு கொண்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) கட்சி, எங்களது கூட்டணியில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியின் தனித்தன்மையையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நினைக்கும் பாசிச சக்திகளை முறியடிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
SDPI கட்சியின் இந்த வருகை, புதுச்சேரி சிறுபான்மை மற்றும் அணைத்து சமூக மக்களின் நலனுக்காக நாம் முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.
வரும் காலங்களில், மாநில அந்தஸ்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக இக்கூட்டணி ஒருங்கிணைந்து வீரியத்துடன் களமிறங்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரா . சிவா
மாநில அமைப்பாளர்
புதுச்சேரி மாநிலம்.திமுக.

More Stories
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
ஊத்தங்கரை தொகுதி மத்தூர் ஊராட்சியில் is தவெக எம்.எல்.ஏ இளையராஜா நன்றிப் பயணம்: பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்து தீர்வு காண உறுதி!
புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும் நடைபெற இருக்கின்ற தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பற்றியும் மாண்புமிகு தமிழக அமைச்சரும்தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அவர்களை….நேயம் மக்கள் கழகதலைவர் G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களும்தமிழக வெற்றி கழக புதுச்சேரி பொறுப்பாளர்களானசுவாமிநாதன் ex MLA அவர்கள்,ஆசானா ex MLA அவர்கள்,தனவேல் ex MLA அவர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.