லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், காமராஜ் நகர் தொகுதியில் தர்பூசணி சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்க உள்ள நிலையில், தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, இன்று சாரம் பகுதிக்குட்பட்ட ஞானப்பிரகாச நகர் பகுதியில் வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, “லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவராகிய நான் தர்பூசணி சின்னத்தில் போட்டியிட உள்ளேன்; எனக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள், “உங்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள்” என உறுதியளித்தனர். மேலும், பகுதி முழுவதும் பொதுமக்கள் ஆரவாரமாக வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர்.






More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.