திருச்சி. டிச 30-
திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, மணிகண்டம், இந்திரா கணேசன் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸில் டிசம்பர் 25 முதல் டிசம்பர் 28, 2025 வரை நடைபெற்றது. இதில் மகளிர் பிரிவில் இந்திரா கணேசன் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் கோப்பையை தமிழ்நாடு மாநில மகளிர் அணி 22 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை பீகார் மகளிர் அணி 18 புள்ளிகளைப் பெற்று ஸ்ரீ காளிஸ்வரி குரூப் ஆஃப் கம்பெனிகள் – சிவகாசி கோப்பையை கைப்பற்றியது. மூன்றாம் இடத்தை
சிறு மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்ட கோப்பை, ஆந்திரப் பிரதேச மகளிர் அணி கைப்பற்றியது ஆண்கள் பிரிவில் இந்திரா கணேசன் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் கோப்பையை ஜம்மு காஷ்மீர் மாநில ஆண்கள் அணி 28 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி குழு நிறுவனங்கள் கோப்பையை மகாராஷ்டிரா மாநிலம் ஆண்கள் அணி 20 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் , பெரம்பலும் செட்டிகுளம் சிறு மலர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி கோப்பை
கேரள மாநிலம் 12 புள்ளிகள் பெற்று மூன்றாவது
இடத்தை பிடித்தது. போட்டி லீக் கம் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. . போட்டிக்கு தலைமை விருந்தினராக சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல். பிரான்சிஸ் கலந்துகொண்டு கோப்பைகளை வழங்கினார்கள். மேலும்
சர்வதேச கோல் ஷாட் பால் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் நோட்டல ராஜேந்திர பிரசாத், இந்திய கோல் ஷாட் பால் சங்கத்தின் பொருளாளர் ராம்பிரவேஷ் குமார்,
சாம்பியன்களுக்கு கோப்பைகளை விநியோகித்தனர் தமிழ்நாடு கோல் ஷாட் பால் சங்கத்தின் பிற சிறப்பு விருந்தினர்கள் தலைவர் டாக்டர் ராஜசேகரன், துணைத் தலைவர்கள் சண்முகநாதன்,
தமிழ்வாணன்,
எஸ்.பி. அண்ணாமலை, பவானி, நித்யா,
டாக்டர் கே. சீனிவாசன், ஆலோசனைக் குழு தலைவர்
மற்றும் திருச்சி மாவட்ட கோல் ஷாட் பால் சங்கத் தலைவர் டாக்டர். பாலகிருஷ்ணன் மற்றும் சங்கத்தின் இணைச் செயலாளர் ஜெயப்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்தனர். முன்னதாக தமிழ்நாடு கோல் ஷாட் பால் சங்கத்தின் துணைத் தலைவர் விக்னேஷ்வன் வரவேற்றார். முடிவில் தமிழ்நாடு கோல் ஷாட் பால் சங்கத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆர். கருணாகரன் நன்றி கூறினார்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..