செவலபுரைஅரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம்வகுப்பு படிக்கும் 57 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேச்சு……
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் செவலபுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி குழுத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் நந்தகோபால் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு பதினோராம் வகுப்பு படிக்கும் 57 மாணவ மாணவிகளுக்குதமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பேசுகையில்:
தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சொல்லும், செயலையும் நிறைவேற்றுகின்றவகையில் உலகமே வியந்து பார்கின்ற வகையில் முதலமைச்சர்
பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார்.
அந்த வகையில்
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின்கடுமையான உழைப்பாலும், அறிவுபூர்வமான செயல் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்று எல்லாத் துறைகளிலும் முதன்மை இடம் பெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில்ஒன்றிய கவுன்சிலர்கள் காசியம்மாள் கோதண்டம், ரவிச்சந்திரன்,ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா ஜெய்சங்கர், ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம்,முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்காவனம்,நிர்வாகிகள் பூண்டி சங்கர், இளையபெருமாள், ஜெயபால், சேகர், மாதவன்,சுதர்சனம் அரசு வழக்கறிஞர்சீனிவாசன், முருகேசன்,பிரகாஷ்,காசி, பூங்காவனம்,ரஹ்மத்துல்லா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

More Stories
சேலம்,மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை – மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம்.
தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்ட அதிமுக மாநில கழக செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்திரு. ஏ. அன்பழகன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ கே டி ஆறுமுகம், திருமுருகன், மாண்புமிகு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் சுந்தர் ஆகியோர்உட னிருந்தனர்.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: குடோனுக்கு சீல், ஒரு நபர் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!புதுச்சேரி:புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலும், வடக்கு காவல் கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும், புதுச்சேரி காவல் துறையினர் சட்டவிரோத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று (ஏப்ரல் 24, 2026) மாலை 4 மணியளவில், டி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் குமரன் வீதி, எண். 22 என்ற முகவரியில் உள்ள ஒரு குடோனை, போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவசரமாக பூட்ட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் கோசாபாளையத்தைச் சேர்ந்த மாரியமுத்து (50) என்பது தெரியவந்தது. தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, அதிக லாபத்திற்காக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரது குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:கூல் லிப் (Cool Lip) – 2 பண்டல்கள்ஹான்ஸ் (Hans) – 8 பண்டல்கள்விமல் பான் மசாலா (Vimal Pan Masala) – 6 பண்டல்கள்வி1 டொபாக்கோ ஹேப்பி ஹோலி (V1 Tobacco Happy Holi) – 7 பண்டல்கள்இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு (Cr. No. 96/2026) பதிவு செய்யப்பட்டு, மாரியமுத்து கைது செய்யப்பட்டார். COTPA சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் (JJ Act) கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குற்றவாளியை விரைந்து கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.