February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வரும் 21-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்.

இந்த ஆண்டு, வரும் 21.12.2025 அன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை ஐந்து (5) வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ மருந்து சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 74,698 குழந்தைகளும் பயனடைவர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிராமம் மற்றும் நகரப்புறங்களில் 425 முகாம்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் 31 இடங்களிலும் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், உடல் ஊனத்தை உண்டாக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிறப்பு முகாம்களை அணுகி பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொள்கிறது.
–சுகாதாரத்துறை இயக்குநர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp