வந்தவாசி, டிச 13:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மூடூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை சமேத ஶ்ரீசீனிவாச பெருமாள் கோவிலில் வருட உற்சவ விழா இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. முதல் நாள் உற்சவத்தில் அங்குரார்பணம், விசேஷ ஹோமம், பூர்ணாஹுதி,
சாற்றுமுறை உள்ளிட்டவை நடந்தேறியது. தொடர்ந்து இரண்டாம் நாள் கோ பூஜையுடன் கூடிய வருட உற்சவம் தொடங்கியது. பிறகு தன்வந்திரி பகவான் ஹோமங்கள், பிரபந்த தனியன்கள், தேசிக பிரபந் பாராயணம் நடைபெற்றது. பிறகு மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் திருமஞ்சனம் நடந்தேறியது. இஞ்சிமேடு பாலாஜி ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
கிருத்திகை சேவைஅருள்மிகு வித்துகிரிவேலவன் திருக்கோவில்
வந்தவாசி கோவில்களில் பொங்கல் பண்டிகை சிறப்பு பூஜைகள்..!
கௌமார மடாலய சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா&முப்பெரும் விழா