June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69-வது நினைவு தினம் அனுசரிப்பு.

திருக்கோவிலூர் டிச 09

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபெருமான், மாவட்ட தலைவர் ஜெ.பொன்னுரங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் பெ.ஆரோக்கியசெல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர், ஏழுமலை, உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் செம்மனந்தல் மணிகண்டன், திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன், ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளரர் குமார், விழுப்புரம் தண்டபாணி மற்றும் பழங்கூர் கிளை தலைவர் ஏழுமலை கிளை துணைச் செயலாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.