February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பெண்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்

மணப்பாறை நவ 19

தலித்துகள், பழங்குடியினர்கள், சிறுபான்மையினர்கள் மற்றும் பெண்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து நவம்பர் 18ஐ சமூகநீதி சமத்துவ நாளாக அனுசரித்து
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்
நெ.1.டோல்கேட் பேருந்து நிலையம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார் மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி
இலால்குடி ஒன்றிய செயலாளர் சப்தரிஷி இலால்குடி நகர செயலாளர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித் சி.பி.ஐ புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வராஜ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் உரை நிகழ்தினார் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் நன்றி கூறினார்

Facebook
YouTube
Instagram
WhatsApp