June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் தொகுதியில் தனி ஒருவராக வீதி வீதியாகச் சென்று ‘பேனா முனை’ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!பர்கூர்: நடந்து வரும் சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆல் இந்தியா யூத் டெவலப்மென்ட் பார்ட்டி கட்சி வேட்பாளர் சமூக ஆர்வலர் மணி கா அவர்களின் ‘பேனா முனை’ சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகிறது.முக்கிய இடங்கள்இன்று காலை முதல் பின்வரும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது:வெப்பாலம்பட்டிகுதிரைசந்தம்பட்டிகுள்ளனுர்நடைப்பயண பிரச்சாரம்இந்த வாக்கு சேகரிப்பின் சிறப்பம்சமாக, ஒரு தனி நபர் இப்பகுதிகளில் உள்ள ராகி தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரடியாக நடந்தே சென்று பொதுமக்களைச் சந்தித்தார். ‘பேனா முனை’ சின்னத்தின் முக்கியத்துவத்தையும், தேர்தல் வாக்குறுதிகளையும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை (Bit Notices) வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வழங்கினார்.பொதுமக்களுடன் சந்திப்புராகித் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, மாற்றத்திற்காக பேனா முனை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். எவ்வித ஆடம்பரமும் இன்றி, மிக எளிமையான முறையில் தனி ஆளாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அவர் மேற்கொண்ட இந்தத் தேர்தல் பணி அந்தப் பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.மாவட்ட செய்தியாளர் கவியரசு. 9900557307