August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வேலூர் மாவட்டம் கண்ணியம்பாடி ஒன்றியம் பகுதியில் உள்ள அனைத்து ஏரிகளும் பாதி வேலை முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏரிகளில் நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமத்துக் குள்ளாகியுள்ளனர். மேலும் குடிநீருக்காகவும் கால்நடைகளுக்கு குடிநீர் இல்லாமலும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தமிழக விவசாய சங்கத்தின் கண்ணியம்பட்டி ஒன்றிய தலைவர் என்.ஜெய் சாமி தலைமையில் பலமுறை மாவட்ட ஆட்சியர் இடமும் , தாசில்தாரிடமும் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனை கண்டித்து வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருடன் துணை தலைவர் பழனி, பொருளாளர் பி. நந்தகுமார் மற்றும் பல விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்களில் கோரிக்கையாக ஏரிகளின் வேலைகளை முழுமையாக முடிக்க வேண்டும் ஏரிகளின் கறைகளை பலப்படுத்த வேண்டும், ஏரிக்கு நீர் வரும் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என்று வேலூர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு வைத்தார்கள்.