திருச்சி மாவட்டம். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ப அப்துல் சமது மீண்டும் போட்டியிடுகிறார். கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து வந்த அப்துல் சமது புத்தாநத்தம் அடுத்த வெள்ளைய கவுண்டம்பட்டிக்கு பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் சில இளைஞர்கள், ஊருக்குள் செல்ல விட மாட்டோம் என்று கூறினர் பின்னர் இது பற்றி தகவல் அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் உடனடியாக வெள்ளைய கவுண்டம்பட்டி ஊர் எல்லைக்கு வந்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் காரில் ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
காரில் வெள்ளைய கவுண்டம்பட்டிக்கு வாக்கு சேகரிக்க வந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமதை கிராமத்தினர் காரில் இருந்து அவர்களது தோளில் சுமந்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிச் சென்றனர் இதை சற்றும் எதிர்பாராத வேட்பாளர் அப்துல் சமத் ஆனந்தக் கண்ணீரில் ஊர் மக்களுக்கு நன்றியை தெரிவித்தார்
பின்னர் வாக்காளர்கள் மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தாம் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் வெள்ளைய கவுண்டம்பட்டி பகுதியில் செய்த பணிகள் குறித்து விளக்கி பேசினார்
மீண்டும் திராவிட மாடல்கள் ஆட்சி அமைய எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாரும்படியும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்





More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.