திமுக வேட்பாளர் தோப்பு என். டி. வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
ஈரோடு. ஏப்ரல். 18
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் சுமார் 200 பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற பகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பக்கத்தில் இருந்து விலகி பெருந்துறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் தோப்பு எம்டி வெங்கடாசலம் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 200 பேருக்கும் திமுக வேட்பாளர் தோப்பு எட்டி வெங்கடாஜலம் கருப்பு சிகப்பு சால்வை அணிவித்து வரவேற்றார்.
அவர்களுக்கு திமுகவின் அடிப்படை உறுப்பினர் அட்டை வழங்க உடனடியாக ஏற்பாடு செய்வதாக திமுக வேட்பாளர் தோப்பு என் டி வெங்கடாஜலம் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தவர்கள், திமுக வேட்பாளர் தோப்பு என்டி வெங்கடாசலம் வெற்றிக்கு பாடுபட போவதாக தெரிவித்தனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.