June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: குடோனுக்கு சீல், ஒரு நபர் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!புதுச்சேரி:புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலும், வடக்கு காவல் கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும், புதுச்சேரி காவல் துறையினர் சட்டவிரோத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று (ஏப்ரல் 24, 2026) மாலை 4 மணியளவில், டி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் குமரன் வீதி, எண். 22 என்ற முகவரியில் உள்ள ஒரு குடோனை, போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவசரமாக பூட்ட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் கோசாபாளையத்தைச் சேர்ந்த மாரியமுத்து (50) என்பது தெரியவந்தது. தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, அதிக லாபத்திற்காக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரது குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:கூல் லிப் (Cool Lip) – 2 பண்டல்கள்ஹான்ஸ் (Hans) – 8 பண்டல்கள்விமல் பான் மசாலா (Vimal Pan Masala) – 6 பண்டல்கள்வி1 டொபாக்கோ ஹேப்பி ஹோலி (V1 Tobacco Happy Holi) – 7 பண்டல்கள்இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு (Cr. No. 96/2026) பதிவு செய்யப்பட்டு, மாரியமுத்து கைது செய்யப்பட்டார். COTPA சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் (JJ Act) கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குற்றவாளியை விரைந்து கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.