June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சாலையோரத்தில் தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் சாலை சேதமடைந்து, வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீர் வீணாகுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சீரமைத்து நீர் வீணாவதைத் தடுக்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.