திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி (மனிதநேய மக்கள் கட்சி) வேட்பாளர் அப்துல் சமதுவை ஆதரித்து மருங்காபுரி வடக்கு ஒன்றியம் ஊத்துக்குளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திராவிட மாடல் அரசு மீண்டும் மலர்ந்திட திட்டங்கள் தொடர்ந்திட தி.மு.க வுக்கு வாக்களித்திட வேண்டும் என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரச்சாரக்களத்தில் நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தி இருக்கின்றோம் என்று சொல்லி செய்த திட்டங்களால் மக்களிடம் உரிமையோடு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம். இந்த தேர்தல் முதல்வர் சொன்னதுபோல் டெல்லி அணிக்கும் – தமிழ்நாடு அணிக்குமான தேர்தல். இதுபோன்று டெல்லி அணிக்கும் – தமிழ்நாடு அணிக்கும் போட்டி வரும் போதெல்லாம் தமிழ்நாடு அணிதான் வென்றிருக்கின்றது, அதே போல் இந்த முறையும் தமிழ்நாடு அணிதான் வெல்லும் என்று கூறினார்.
இதில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு வேட்பாளருடன் நடந்து சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.