தமிழக உரிமைப் போரில் வெற்றி: மத்தூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்“மு.க. ஸ்டாலின் வென்றார் – தமிழ்நாடு வென்றது” மற்றும் “வென்றோம் ஒன்றாக” என்ற முழக்கத்தோடு, ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா முறியடிக்கப்பட்டதை முன்னிட்டு மத்தூரில் திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.தமிழகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும், தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த ‘தொகுதி மறுவரையறை’ மசோதாவை தமிழக முதலமைச்சர் அவர்கள் கடுமையாக எதிர்த்து நின்றார். நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டு, தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்தூர் பேருந்து நிலையத்தில் கொண்டாட்டம்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் அவர்களின் ஆலோசனையின்படி, மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குணா வசந்தரசு தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் சிறப்பான கொண்டாட்டங்கள் நடைபெற்றன.நிகழ்வின் போது, திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வானவேடிக்கை நிகழ்த்தி, பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள், மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் கிளைக் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு, “வென்றோம் ஒன்றாக” என முழக்கங்களை எழுப்பினர்.செய்தியாளர் முபாரக் 8428723357
More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!