சேலத்தில் திருட்டு வழக்கில் தலைமறைவு வடமாநில குற்றவாளி கைது.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே திருட்டு வழக்கில் தலைமறைவான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது செய்தனா்.
ஆட்டையாம்பட்டியை அடுத்த பாப்பாரப்பட்டியைச் சோ்ந்தவா் கணபதி. இவா் ராசிபுரம் பிரதான சாலையில் துணிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். நாள்தோறும் வியாபாரம் முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு தம்பதி இருவரும் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 2018, ஜூன் 1 ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். வீட்டிற்குள் சென்றபோது வீட்டிலிருந்து தப்பிக்க முயன்ற இருவரை பிடித்தனா். அவா்களிடமிருந்த பணம், கைக்கடிகாரத்தை பறிமுதல் செய்தனா்.
பிறகு அவா்கள் இருவரையும் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த ஹரி சிங் மகன் ஜோக் சிங் (30), சம்பத் சிங் மகன் ராம்ஜி (34) என்பது தெரியவந்தது.
மேலும், இருவரும் காகாபாளையம் பகுதியில் வேலை செய்துகொண்டு அருகில் உள்ள ஊா்களில் திருடுவது வழக்கமாக வைத்துள்ளனா். இருவரையும் போலீஸாா் கைதுசெய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னா், ஜாமீனில் வந்த இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக சுற்றிவந்தனா். இதனால், சேலம் நீதிமன்றம் இருவரையும் பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்தது. சேலம் சிறப்பு படையினா் அவா்களை தேடிவந்தனா். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஒரு கைப்பேசி கடையில் இருவரும் பணிபுரிந்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்று ஜோக் சிங்கை கைதுசெய்த போலீஸாா் செவ்வாய்க்கிழமை சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா். மேலும், தலைமறைவாக உள்ள ராம்ஜியை தேடிவருகின்றனா்.

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.