மணப்பாறை, ஜனவரி, 31.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமினை பொன்னம்பலம் பட்டி சுங்கச்சாவடி ப்ராஜெக்ட் மேலாளர் செந்தில்குமரன் துவக்கி வைத்தார் உடன் சுங்கச்சாவடி மேலாளர் பெரிய ராஜ் மற்றும் சுங்கச்சாவடி பணியாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் விழாவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள இருவருக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு இலவசமாக ரத்த பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் சரிபார்த்த பின் வாங்கி சென்றனர் பொதுமக்கள் கூறுகையில் இவ்வாறு சுங்கச்சாவடியில் மருத்துவ முகாம் நடைபெறுவதால் எங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தெரிவித்தனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!