வந்தவாசி, ஜன 31:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மகாத்மா காந்தியின் 79 ஆவது நினைவு தினத்தையொட்டி ‘என்றும் மகாத்மா’ பேச்சரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பெ.பார்த்திபன், ஆசிரியர் மஹாவீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சா.இரா.மணி பங்கேற்று என்றும் மகாத்மா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். பிறகு காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியில் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றனர்.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!