திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமலை , சுரைக்காய் பட்டியை சேர்ந்த சின்ன காளை மகன் கருப்பையா (80), AEO RTD உதவி கல்வி அதிகாரியாக பணிபுரிந்து வந்த நிலையில் வயது ம மூப்பால் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் மகன் வடிவேலு வீட்டில் இருந்து வந்துள்ளார் . இளைய மகன் விஜயகுமார் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பலமுறை அண்ணன் வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல பலமுறை முயன்ற போது தனது அண்ணன் வடிவேலு மற்றும் அக்கா அமுதா ஆகியோர் அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது , இந்நிலையில் இன்று திடீரென தந்தை இறந்து விட்டதாகவும் மகன் விஜயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது ,தனது தந்தை இறப்பதற்கு முன்னதாக தன்னிடம் 2 கோடி ரூபாய் பணம் வைத்து இருப்பதாக கூறியுள்ளார் ,அதன் அடிப்படையில் தனது தந்தையின் பணத்திற்காக தனது தந்தையை சிகிச்சை பார்க்க விடாமல் தடுத்து விட்டதாகவும் எனது தந்தையின் இறப்பில் கொலை செய்யப்பட்டுள்ளாரா? இல்லை இயற்கை மரணமா ? என துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பெயரில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து இறந்த கருப்பையாவின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையா? இயற்கை மரணமா ? தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் , அக்கா ஆகிய இருவர் மீது தம்பி புகார்:

More Stories
நகைக்கடை சுவரைத் துளையிட்டு திருட்டு: சாவியை கவனிக்காததால் 2 கிலோ தங்கம் தப்பியது! பர்கூர் அருகே பரபரப்பு
தனியார் கம்பெனியில் ரூ.37.5 லட்சம் மதிப்பிலான பிவிசி மூலப்பொருள் திருட்டு: ஸ்டோர் மேனேஜர் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு!
அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருட்டு – இருவர் கைதுவிழுப்புரம் மாவட்டம் காட்டு சித்தாமூர் பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளியில் கணினி மானிட்டர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளியில் பயன்படுத்தப்பட்டு வந்த கணினி மானிட்டர்கள் சில காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கிடைத்த தகவல்களின் பேரில், காட்டு சித்தாமூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருடப்பட்ட கணினி மானிட்டர்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.