திருப்பூர்
டிசம்பர்- 21
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் சிறப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வெள்ளையங்காடு அருகே உள்ள சிவாளா மஹாலில் மாநில பொதுச் செயலாளர் வீ,டி பாண்டியன் தலைமையில் மாநில பொருளாளர் மணிவேல் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் நிறுவனர் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது மேலும் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் சார்பில் வெற்றி பெறும் கூட்டணியில் ஆதரவு தெரிவித்து களப்பணியாற்றி நிச்சயமாக கழகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்று மக்களுக்கு செய்யும் சேவையை மேலும் அதிகமாக செய்ய இருப்பதாக தெரிவித்தார் இந்த நிகழ்வில் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்ட பெரும் திரளாக பங்கேற்றனர் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது,,,

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!