June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு நடை ரோந்து – குற்ற தடுப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில், 03.06.2026 இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்கள் தலைமையில் சிறப்பு நடை ரோந்து நடைபெற்றது.
ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய அனைத்து உட்கோட்ட காவல் நிலைய எல்லைகளிலும் இந்த ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
ரோந்தின்போது உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பங்கேற்று இரவு நேர குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

செய்தியாளர்
கவியரசு
9900557307