அரியலூர் மாவட்டம் கோவிலூர் ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது ஆனால் கோவிலூர் ஊராட்சியில் இவ்வருடத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர்கள் புகார் அளித்தம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அறிவித்ததன் அடிப்படையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது இதற்கு காரணமான ஊராட்சி செயலாளர், 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிதலப் பொறுப்பாளர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் – 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்