மணப்பாறை சட்ட மன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர் கதிரவனுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த தவெ க வினர்..
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக ஆர் கதிரவன் அவர்களை நேற்று சென்னை நூங்கம் பாக்கம் தனியார் விடுதியில் 234 தொகுதி வேட்பாளர்களை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவித்தார்.




இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து ரயில் மூலம் மணப்பாறை தொகுதிக்கு வருகை தந்த தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆர். கதிரவனுக்கு கட்சியினர் பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க விசில் ஊதி ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அதன் பின்னர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக காமராஜர் சிலை வரை சென்று பின்னர் மஸ்தான் தெருவில் உள்ள த.வெ க மாவட்ட அலுவலம் வரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் வருகை தந்த வேட்பாளர் கதிரவனுக்கு மணப்பாறை நகர த வெக சார்பில் ஆரன்ச் பழம் மாலை அணிவித்தும் கேரளா சென்டை மேளம் முழங்க பல்லாயிரகணக்கான மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இதில் மணப்பாறை வையம்பட்டி மருங்காபுரி துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

More Stories
சேலம்,மேட்டூரில் சூறாவளிக் காற்றுடன் மழை – மின்கம்பங்கள், மரங்கள் விழுந்து 3 வீடுகள் சேதம்.
தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்ட அதிமுக மாநில கழக செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர்திரு. ஏ. அன்பழகன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வின் போது மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள்ஏ கே டி ஆறுமுகம், திருமுருகன், மாண்புமிகு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் சுந்தர் ஆகியோர்உட னிருந்தனர்.
புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை: குடோனுக்கு சீல், ஒரு நபர் கைது – போலீசாரின் அதிரடி நடவடிக்கை!புதுச்சேரி:புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) கலைவாணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலும், வடக்கு காவல் கண்காணிப்பாளர் வம்சீதர ரெட்டி, இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையிலும், புதுச்சேரி காவல் துறையினர் சட்டவிரோத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று (ஏப்ரல் 24, 2026) மாலை 4 மணியளவில், டி.நகர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜன் மற்றும் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் குமரன் வீதி, எண். 22 என்ற முகவரியில் உள்ள ஒரு குடோனை, போலீசார் வருவதைக் கண்ட நபர் ஒருவர் அவசரமாக பூட்ட முயன்றார். சந்தேகமடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் கோசாபாளையத்தைச் சேர்ந்த மாரியமுத்து (50) என்பது தெரியவந்தது. தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, அதிக லாபத்திற்காக அரசு தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதை அவர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து அவரது குடோனில் போலீசார் நடத்திய சோதனையில், கீழ்க்கண்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன:கூல் லிப் (Cool Lip) – 2 பண்டல்கள்ஹான்ஸ் (Hans) – 8 பண்டல்கள்விமல் பான் மசாலா (Vimal Pan Masala) – 6 பண்டல்கள்வி1 டொபாக்கோ ஹேப்பி ஹோலி (V1 Tobacco Happy Holi) – 7 பண்டல்கள்இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1,50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் காவல் நிலையத்தில் வழக்கு (Cr. No. 96/2026) பதிவு செய்யப்பட்டு, மாரியமுத்து கைது செய்யப்பட்டார். COTPA சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் (JJ Act) கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குற்றவாளியை விரைந்து கைது செய்து, தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வடக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.