புதுச்சேரி:
இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் மற்றும் பிம்ஸ் (PIMS) மருத்துவமனை இணைந்து புதுவை தமிழ்ச் சங்கத்தில் மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தின.
இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக முத்துலட்சுமி சரவணன் கலந்துகொண்டார். தமிழ்ச்சங்கத் தலைவர் V. முத்து, பிம்ஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, கலைமாமணி டாடா பானுமதி, டாக்டர் பிரமிளா தமிழ்வாணன் மற்றும் கவிக்குயில் மியூசிக் அகாடமி சுசீந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் புதுச்சேரி, கடலூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் மரக்காணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நலச் சங்கத் தலைவர் முரளிதரன், செயலாளர் சரவணன், பொருளாளர் நெடுஞ்செழியன் மற்றும் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.