செஞ்சி, அக்-31
செஞ்சி சந்தைமேடு பகுதியில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் இயங்கி வருகிறது. சங்கத்தில் விவசாயிகளின் வேளாண் விளை பொருட்களை மறைமுக ஏலம் மூலம் விற்பனை மேற்கொள்ளும் நடைமுறை 27.10.2025 அன்று தொடங்கப்பட்டது . இதன் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களுக்கான தொகை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நெல் மறைமுக ஏலம் செய்யப்படும் துவக்க நிகழ்ச்சியில் விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் மாரியப்பன், பொது மேலாளர் தேசிங்கு, உதவியாளர் ரவி, பழனிவேல், மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மறைமுக நெல் கொள்முதல் நடைபெறும் மேலாண் இயக்குனர் தெரிவித்தார்.
செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் நெல் மறைமுக ஏலம் துவக்கம்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்