டிசம்பர்:30
கோவை மாவட்டம், காரமடை காந்தி மைதானம் பகுதியில் உள்ள ஸ்ரீ சபரி வாசன் ஐயப்பன் ஸ்ரீ அம்மன் திருக்கோயிலில் 56 ஆம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு 28ம் தேதி காலை மகா கணபதி ஹோமம் பூஜை தொடங்கி ஐயப்ப சுவாமிக்கு அலங்கார பூஜை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து செண்டை மேளம், நாதஸ்வர இசை, வான வேடிக்கை, பஜனையுடன் ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா தேரில் எழுந்தருளி அனைவருக்கும் அருள் பாலித்தார். இதனை அடுத்து மாலை விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி கோவிலில் தொடங்கி தட்டில் விளக்குடன் தேர்வீதிகளில் அணிவகுப்பாய் சென்று கோவிலை வந்தடைந்தார்கள். மறுநாள் 29ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று அதிகாலையில் மாலையிட்ட ஐயப்ப பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் கலந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின் மதியம் 12 மணிக்கு கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் தலைவர் பாரதி தொடங்கி வைத்தார். செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
காரமடையில் உள்ள அருள் தரும் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் 56 ஆம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் அன்னதான விழா!!

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகா மாரியம்மன் கூழ்வார்த்தல் திருவிழா..!
பிரதமர் மோடியின் ஆயுள் வேண்டி புதுச்சேரி பாஜகவினர் மனக்குள விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு!