வந்தவாசி, டிச 30:
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியம், இளங்காடு ஊராட்சியில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் சார்பில் கோமாரி நோய் தடுப்பு பணி முகாமை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். மேலும் கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பொது மக்களுக்கு கால்நடைகளை பராமரித்தல், நோய் கிருமிகளில் இருந்து பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வு தகவல்கள் வழங்கப்பட்டது. அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்