புதுச்சேரி மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் மே தின விழா இன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்டு,புதிய பேருந்து நிலையம்,தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை, உப்பளம், வாணரப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் சாலை ஆட்டோ ஸ்டாண்டு மற்றும் பல்வேறு இடங்களில்
மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உடை, மோர், அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
முன்னதாக அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி அவர்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவை கொடியை ஏற்றினார். மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம் அவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
ரயில் நிலைய அண்ணா தொழிற்சங்கப்
பேரவை ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் கண்ணன்,
செயலாளர் மதன், ஜிக்கி, செல்வம், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!