வந்தவாசி, மார்ச் 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கருடக் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. முன்னதாக இந்த வைபவத்தில் மூல மூர்த்திகள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. உற்சவ மூர்த்திகள் மேளதாளத்துடன் வீதியுலா வந்தனர்.

More Stories
கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சித்தன் நகர் அருள்மிகு ஸ்ரீ அழகு மாரியம்மன் கோவில் திருவிழா..