வந்தவாசி, மார்ச் 31:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாள் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர் வழங்கப்பட்டது. முன்னதாக உற்சவ மூர்த்திகளுக்கு கோவிலில் விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது.

More Stories
ஸ்ரீ ஆத்மநாதர் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது
அய்யலூர் அருகே கோவில் திருவிழாவில் செருப்பு மற்றும் துடைப்பத்தால் ஒருவருக்கொருவர் அடித்தும், உடலில் சேறு பூசியும் வினோத நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
எரமலூர் பெருமாள் கோவிலில் வசந்தோற்சவ விழா..!