June 15, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

“விக்சித் பாரத் மற்றும் சிறந்த புதுச்சேரி உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் இளைஞர் தலைவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு. வி. பி. ராமலிங்கம் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு. மோகன்குமார் அவர்கள், மாநில துணைத் தலைவர் திரு. பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு இளைஞர்களை ஊக்குவித்து வழிகாட்டினர்.

வளர்ந்த இந்தியா – விக்சித் பாரத் 2047 என்ற இலக்கை அடைவதிலும், சிறந்த புதுச்சேரியை உருவாக்குவதிலும் இளைஞர்களின் பங்கு, பொறுப்பு மற்றும் தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினர்.

தேச முன்னேற்றத்திற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட உறுதிமொழியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இன்றைய இளைஞர்களே நாளைய இந்தியாவின் சிற்பிகள்!