வந்தவாசி, மே 28:
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 12-வது மாதமான துல் ஹஜ்ஜின் 10-வது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அனைத்து ஜமாத் சார்பில் அம்மையப்பட்டு பகுதியில் உள்ள ஈத்கா திடலில் பக்ரீத் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி தனது அன்பின் வாழ்த்துக்களை வெளிப்படுத்திக் கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்