வந்தவாசி, ஜூன் 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்தி அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் மேற்பார்வையில் யாகசாலை பூஜை நடந்தேறியது . இரவு உற்சவ மூர்த்தி அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்று மேளதாளத்துடன் கோயில் பிரகாரத்தில் பவனி வந்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

More Stories
வழூர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் தேரோட்டம்: ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்பு
புதுச்சேரி முலக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது