June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

போதைப் பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டு ப்படுத்துவது மற்றும் சட்டவிரோதமான முறையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமை வகித்தார். மேலும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. சுஜாதா, மாவட்ட கலால் பிரிவு தாசில்தார் தியாகராஜன் மற்றும் துணை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.