இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் நிறுவனர் திருவேங்கடம் மற்றும் தலைவர் பழனி ஆகியோர் பேசும்போது…
புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் இணைந்து 13 வது ரேங்கிங் ஓபன் நேஷனல் ஸ்பீட் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் தேசிய அளவிலான போட்டியை வருகின்ற ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஸ்கேட்டிங் ரிங்கில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 6 முதல் 8 வயது வரை 8 முதல் 10 வயது வரை, 10 முதல் 12 வயது வரை, 12 முதல் 15 வயது வரை, 15 முதல் 18 வரை மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என்ற பிரிவுகளில் நடைபெறுகிறது என்று குறிப்பிட்ட அவர்கள்
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 1500 ஸ்கேட்டர்கள் பங்கேற்க உள்ளனர் இது நாட்டின் மிகப்பெரிய கேட்டினங் நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த போட்டியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைப்பதாகவும் அவர்கள் குறிப்பு தெரிவித்தனர்.
ஏட்டியின் முன்னதாக சாம்பியன்ஷிப் போட்டியின் அதிகார பூர்வ லோகோ புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் நிர்வாகிகளால் வெளியிடப்பட்டது.
பேட்டியின் போது பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் பொதுச் செயலாளர் தாமஸ் பொருளாளர் செந்தில் குமார் துணைத் தலைவர் தனஜெயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..