வந்தவாசி, டிச 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பிருதூர் புனித வளனார் முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேப்பூர் புனித வளனார் பள்ளி தாளாளர் அருட்பணி AR அந்தோணிசாமி, அருட் சகோதரிகள் பிலோமினா, மேரி, ரெக்ஸ்லின் மைக்கேல் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரைகள் வழங்கினர். மேலும் மாற்றுத் திறனாளிகள், இருளர் இன மக்கள் உள்ளிட்ட ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த 90 நபர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள், படுக்கை விரிப்புகள், ஆடைகள், பெட்ஷீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. முன்னதாக, மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று, சிறப்பு அழைப்பாளர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!