திருச்சி-
டிசம்பர்-9
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் கருப்பூர் ஊராட்சி காரைக்குளத்தில் இருந்து கருப்பூர் வடக்கிப்பட்டி செல்லும் சாலை மேடு, பள்ளமுமாக பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் இந்த சாலை கடந்து செல்கையில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் அவசர தேவைகளுக்கு செல்பவர்களும் ,பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்களும் ,வேலைக்கு செல்பவர்களும் இந்த சாலையை கடந்து செல்கையில் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. மழைக்காலங்களில் பள்ளங்களில் நீர் தேங்கி சாலை சரிவர தெரியாமல் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது . ஆகவே இந்த சாலையை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்படுத்தி தர வேண்டுமென தமிழர் தேசம் கட்சியின் மணப்பாறை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.ஆர் முத்துசாமி தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். சரி செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம். இல்லையெனில் சாலை மறியல் ,போராட்டம் வெடிக்கும்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்